காணி ஆணையாளர் ஆர்.பி.ஆர். ராஜபக்வை அப்பதவியிலிருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக பிரதமர் காரியாலயம் அறிவித்துள்ளது.
இவரது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றாமை இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தொடர்பாக கிடைக்கப் பெற்றுள்ள தொடர் முறைப்பாடுகளை அடுத்து இவர் இப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இவர் தொடர்பிலான ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் செயலகம் மேலும் கூறியுள்ளது.





